Advertisment

பழனி கிரிவல பாதையில் புதிய ஆக்கிரமிப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நகராட்சி, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
madurai high court

பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நகராட்சி, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

பழனி திருத்தொண்ட திருச்சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பழனி கோவில் கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அந்த ஆக்கிரமிப்புகள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, பழனி கோவில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் எந்த விதமான வணிக ஆக்கிரமிப்புகளும் இருக்கக் கூடாது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். மேலும், திருப்பதியைப் போல பக்தர்களை அழைத்துச் செல்ல பழனி முருகன் கோவில் கிரிவல வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நகராட்சி, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்; கோயிலின் கூடுதல் பாதுகாப்புக்காக சிறப்பு பட்டாலியன் காவல் துறையினரை பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment