வெளிச்சந்தையில் அதிக விலை காரணமாக ரேஷன் கடைகளில் உள்ள , பருப்பு , பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும் , பாமாயில் ரூ. 25-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ரேஷனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசனை செய்யப்படுவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விலை சில மாதங்களில் உயர்த்தப்படலாம் என்றூ கூறப்படுகிறது.