/indian-express-tamil/media/media_files/2025/06/13/AlUYbX5tx326xr1HdalV.jpg)
கடலில் வீசிய வலுவான காற்றினால் விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலம் அருகே கடலில் மூழ்கியது. படகில் இருந்த ஆறு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கடலில் வீசிய வலுவான காற்றினால் விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலம் அருகே கடலில் மூழ்கியது. படகில் இருந்த ஆறு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதுபார்த்துக் கொண்டிருந்த விசைப்படகு, பராமரிப்புப் பணிக்காக மண்டபம் தெற்கு துறைமுகத்திலிருந்து பாம்பன் பழைய பாலம் வழியாக வடக்கு துறைமுகம் நோக்கி சென்றது.
இந்த நிலையில், கடலில் வீசிய வலுவான காற்றினால் விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலம் அருகே கடலில் மூழ்கியது. படகில் இருந்த ஆறு மீனவர்களும் அருகில் இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மூழ்கிய விசைப்படகை தற்போது மீட்புப் பணியாளர்கள் கடலில் தேடி மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பாம்பன் புதிய பாலம் செயல்பாட்டில் வந்த பிறகு, பழைய பாம்பன் பாலம் இதுவரை வெறும் இரண்டு முறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.