Advertisment

ம.தி.மு.க: பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம்: பிற்பகலில் மீண்டும் விசாரணை

பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலில் உள்ளதா ? இல்லையா ? என்பது குறித்து பிற்பகலில் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலில் உள்ளதா ? இல்லையா ? என்பது குறித்து பிற்பகலில் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பரம்பரம் சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய ம.தி.மு.கவின் மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம்  ஒதுக்கப்படும் என்றும் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய ம.தி.மு.கவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பம்பரம் சின்னம் பொதுச்சின்னத்திற்கான பட்டியலில் உள்ளதா என்பது குறித்து  தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment