/indian-express-tamil/media/media_files/2025/01/26/IU0ffFrTV2Gz9ZBf1ZHJ.jpg)
மதுரை மாநகர வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தல்குடி பகுதியில் உள்ள கால்வாய், முக்கிய விழாவொன்றுக்கான பாதையில் இருந்தது. இந்த கால்வாயின் காட்சி எவருக்கும் தெரியாமல் இருக்க, அதனை மறைக்கும் வகையில் திரைச்சீலைகள் கட்டப்பட்டு, கட்சிக் கொடிகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் இது குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டனர். இந்தப் பின்னணியில், மதுரையில் முத்து சிலை திறப்பு விழாவை முடித்த பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பந்தல்குடி பகுதியில் நேரில் சென்று அந்த கால்வாயை ஆய்வு செய்தார்.
அங்கு ஏற்பட்ட நிலைமையைப் பார்த்த பிறகு, அந்தக் கால்வாயை சுத்தம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் திடீர் உத்தரவு வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.