/tamil-ie/media/media_files/uploads/2018/08/tha.-pandian.jpg)
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்திமருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தா.பாண்டியன் சிகிச்சை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் சிகிச்சைக்கு பின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார்.
இந்நிலையில், இன்று மீண்டும் முச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக தொற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்ற முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த தலைவர் தா.பாண்டியனை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம விசாரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.