Advertisment

'எடப்பாடி பழனிசாமி திகார் செல்வார்': ஓ.பி.எஸ் ஆவேசம்

நான் சில விஷயஙகளை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வார் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆவேசமாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
O Pannerselvam High court
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

o-panneerselvam | ops-eps | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்பாது “தேனி தொகுதியில் வென்ற ஓ.பி. ரவீந்திரநாத்தை அமைச்சர் ஆகாமல் தடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று குற்றஞ்சாட்டினார்.

Advertisment

தொடர்ந்து, தாம் சில உண்மைகளை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வார் என்றார். தொடர்ந்து, பேசிய ஓபிஎஸ், “அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகதான் ஓபிஎஸ் தொடர்ந்து பயணிப்பான்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒருமுறைதான் முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். எனக்கு அம்மா (ஜெயலலிதா) இரண்டு முறை பதவி கொடுத்தார்கள்.

சசிகலா ஒருமுறை கொடுத்தார். அதை நான் அவர்களிடம் அப்படியே திருப்பி கொடுத்து விட்டேன். மேலும், என்னுடைய பணி நிறைவாக உள்ளது. என்னை யாரும் நம்பிக்கை துரோகி என சொல்ல முடியாது” என்றார்.

தொடர்ந்து, “வர்தா புயல் வந்தபோது, தண்ணீர் பஞ்சம், ஜல்லிக்கட்டு பிரச்னை வந்தபோது உயிரை கையில் பிடித்துக் கொண்டு பிரச்னைகளை சுமூகமாக முடித்தேன்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ops Eps O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment