Advertisment

பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்துச் சிதறியால் அதிர்ச்சி; பரமக்குடி இளைஞர் உயிரிழப்பு

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞரின் பாண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியதால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
explosion 2

பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞரின் பாண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியதால் இளைஞர் உயிரிழந்தார்.

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞரின் பாண்ட்  பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியதால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு பின்னால், அமர்ந்து வந்தவர் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள ஓட்டப்பாலத்தைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவருடைய நண்பர் பாண்டி.  ரஜினி தனது நண்பர் பாண்டியுடன் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றுவிட்டு பரமக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமம் பகுதியில் ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், ரஜினி அதிர்ச்சி அடைந்ததால், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால், அமர்ந்து சென்ற பாண்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்போன் வெடித்துச் சிதறியதால், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ரஜினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment