பரந்தூர் விமான நிலையம் : மத்திய அரசு அனுமதி

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. 
இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து  அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது. 
மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக எழுந்து மூலம் அவர் அளித்த பதிவில் கூறியதாவது: பசுமைவெளி விமான நிலைய கொள்கை 2008-ன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசின் டிக்கோ சார்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. 
இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து  இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. 
இந்த ஆலோசனைகளுக்குப்பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை வகைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்த வழிகாட்டுதல் குழு, பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்து 9.7.2024ம் தேதி பரிந்துரைத்து உள்ளது. 
பசுமைவெளி விமான நிலைய கொள்கையின்படி, நிதியளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்கள் அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவை சார்ந்தது.” இவ்வாறு கூறி உள்ளார். 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: