/indian-express-tamil/media/media_files/VXYi2d70UMcGNveu3KnL.jpg)
தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்தபடி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது.
இன்று தொடங்கும் வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் மார்ச் 27ம் தேதி வரை நீடிக்கிறது. மார்ச் 28ம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில், மனுக்கள் பரிசீலனை நடைபெறும். போட்டியிட விருப்பம் தெரிவிக்காதவர்கள், தங்களது வேட்பு மனுவை 30ம் தேதி வாபஸ் பெறலாம். 30ம் தேதி மாலை இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டும்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளுக்கும் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறுகையில், “ வேட்பு மனு தாக்கல் நடைபெறும் நாட்கள் மற்றும் பரிசீலனை, வாபஸ் பெறும் நாட்கள், வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவர் அறிவிப்பார். அறிவிக்கப்படும் நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுதாக்கல் தாக்கல் செய்யப்படும் .
பொது வேட்பாளர்களாக இருந்தால் ரூ. 25,000, ஆதிதிடாவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ. 12,500 செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இருந்தால், சின்னத்தின்படிவம் இடம்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.