Advertisment

நாடாளுமன்ற தாக்குதல்: தி.மு.க எம்.பி-தான் காரணம்: அவதூறாக பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவு

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கலர் புகை குண்டு வீச்சு தொடர்பான விவகாரத்தில் தர்மபுரி தி.மு.க எம்.பி குறித்து அவதூறாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
sada

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கலர் புகை குண்டு வீச்சு தொடர்பான விவகாரத்தில் தர்மபுரி தி.மு.க எம்.பி குறித்து அவதூறாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisment

பிரவீன் குமார் என்பவர் ’சங்கி பிரின்ஸ்’ என்ற எக்ஸ் அக்கவுண்ட் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகை குண்டு வீச்சுக்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு பின்பு நீக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரில், பொய் செய்தியை பரப்பிய பிரவீன் ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த புகாரில் நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீச்சு சம்பவத்திற்கு தி.மு.க. எம்.பி காரணம் என்று தவறாக பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

குற்றப்பிரிவு செக்‌ஷன் 504, 505(1)(பி), 66 என்று 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment