சென்னை கடற்கரை - எழும்பூர் பராமரிப்பு பணி: இந்த தேதிகளில் 16 ரயில்கள் ரத்து

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது.

author-image
WebDesk
New Update
Partial full cancellation of EMU trains in Chennai announced on march 06 and 07 Tamil News

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது.

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை(மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தம்.

Advertisment
Advertisements

மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.

நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தம்.

தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்.

மண்டபம் - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.

புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.

சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். 

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Chennai Train

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: