/tamil-ie/media/media_files/uploads/2019/02/leader-1.jpg)
Party reformation in TN seems impossible
Party reformation in TN seems impossible : நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று பேசினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறு சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது நடக்கவே நடக்காத ஒன்றாக தான் போய் முடியும் என்று அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கட்டுப்பாடு இல்லாத அரசியல் கட்சி ஒரு போதும் வெற்றி பெறாது. நானும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பார்க்கின்றேன், மேடை கட்டுப்பாடு என்ற ஒன்று நம்மிடம் என்றுமே இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
தென் தமிழகத்தில் காங்கிரஸூக்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அதனை பலப்படுத்த இயலவில்லை என்று பேசிய அவர், இந்த கூட்டமே காங்கிரஸ் கட்சியின் வேராக திகழும் தென் தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்தவே என்றும் பேசியுள்ளார் கே.எஸ் அழகிரி. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தனித்து நின்று வெற்றி பெற இயலாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
மேலும் படிக்க : தெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.