சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவணகுருநாதன்(40), இவர் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வருவதாகவும். இவர் தினமும் கிண்டியில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து அங்கு இருந்து பூந்தமல்லி செல்லும் பேருந்தில் பயணம் செய்து மதுரவாயல் பகுதிக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.11) வழக்கம் போல் வேலை முடித்து விட்டு கிண்டியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து பூந்தமல்லி பஸுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லிக்கு செல்லும் தடம் எண் 101 பேருந்து வந்தபோது அந்த பேருந்தில் ஏற முயற்ச்சித்த போது அதற்குள் பேருந்து நிற்காமல் சென்றது. இதனைக் குறித்து அங்குள்ள டைம் கீப்பர் 70 வயது மதிக்கதக்க முதியவர் இடம் கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாய் தகறாரு முற்றியதால் ஆத்திரமடைந்த முதியவர், சரவணகுரு நாதனின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து வந்து தாக்கிய போது இதனை கண்ட நடத்துனர், டிரைவர் ஆகியோர் ஒடி வந்து காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கிய போது அடி வாங்க முடியாமல் சரவணன் குருநாதன் அலறினார். இதனை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் எதற்காக ஒருவரை இத்தனை பேர் சூழ்ந்து கொண்டு அடிக்கிறீங்க என்று கேள்வி எழுப்பிய போது அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் தாக்கத் தொடங்கினார்கள். உடனே தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட நடத்துனர் டிரைவர் டைம் கீப்பரை சமாதானம் செய்தனர். ஆனால், காயம்பட்ட நபரை கண்டு கொள்ளாமல் விட்டதால் விட்டா போதும் என்று சரவணன் குருநாதன் அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றார். இதனால் சற்று நேரம் கோயம்பேடு பேருந்து நிலையம் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், பஸ் நிற்காமல் சென்றதை தட்டி கேட்ட பயணியை, நடத்துனர் டிரைவர் டைம் கீப்பர் ஆகியோர் தரதரவென இழுத்து சென்று சரமாரியாக தாக்கிய சம்பவம் கதிகலங்கி உள்ளோம். பயணி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் இதே பயணிகள் அரசு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தாலோ அல்லது ஆபாச வார்த்தைகளை திட்டினாலும் அடித்தாலோ அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், மக்கள் நிறைந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு பயணியை அரசு ஊழியர் கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவத்தை குறித்து ஏன் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தினந்தோறும் இது போல் தகராறுகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுவாக பயணிகள் பேருந்துகளை குறித்து டைம் கீப்பர்களிடம் தகவலை கேட்டால் அவர்கள் சரிவர பதில் சொல்லாமல் விரட்டி அடிப்பது நாளுக்கு நாள் தொடர் கதையாக உள்ளது. மேலும், பயணியை சரமாரியாக தாக்கிய நடத்தினர் டிரைவர் டைம் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை எழுந்துள்ளது.