/tamil-ie/media/media_files/uploads/2023/02/train-india-lockdown.jpg)
வியாழக்கிழமை இரவு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது, உரிய ஆவணங்கள் ஏதுமின்றி அதிக அளவு அமெரிக்க டாலர்களை எடுத்துச் சென்ற நபரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
RPF இன் மூத்த அதிகாரி ஒருவர், கான்ஸ்டபிள் டி. இளையராஜா ரயில் நிலைய நடைமேடையில் பணியில் இருந்தபோது, தோளில் பையுடன் ஒருவர் அவசரமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சிப்பதைக் கவனித்தார்.
இதனால் கான்ஸ்டபிள் அந்த நபரை நிறுத்தி ரயில் டிக்கெட்டைக் கேட்டார். அவரிடம் செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் இல்லை என்று அந்த நபர் தெரிவித்ததும், காவலர் அவரின் தோள் பையை பேக்கேஜ் ஸ்கேனர் மூலம் சோதிக்க தொடங்கினர்.
அந்த பையில், பாலித்தீன் சுற்றப்பட்ட மூட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூட்டையை திறந்து பார்த்தபோது, சுமார் ₹65 லட்சத்துக்கு சமமான அமெரிக்க டாலர் நோட்டுகள் கிடைத்தன. இதனால், டாலர் வைத்திருந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.