சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதிற்கு எதிரான பாட்னாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட்னா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கவுஷலேந்திர நாராயண், உதயநிதி மீது வழக்கு தொடர்ந்தார். கடந்த செப்டம்பர் 4ம் தேதி இந்த வழக்கு தொடரப்பட்ட்டது. செக்ஷன் 153 ( ஏ) , 295 (ஏ), 298, 500 மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சரிகா வஹாலியாஸ் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 13ம் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“