/tamil-ie/media/media_files/uploads/2018/09/d155.jpg)
திருக்குவளையில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
மு.கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். அதுவும், திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பெரும்பாலானோரின் ஆதரவோடு ஸ்டாலின் தலைவராகி இருக்கிறார். அண்ணா மறைவுக்குப் பிறகு, கலைஞர் தலைவரான போது, அவர் முள் மீது ஏறி வந்து அந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. ஆனால், ஸ்டாலினுக்கு அப்படியொரு கடினமான சூழல் இல்லை.
கட்சியினரிடம் செல்வாக்கு பெற்று தலைவராகியுள்ள ஸ்டாலின், மக்களின் செல்வாக்கு பெற்று தலைவராவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், கருணாநிதியின் சொந்த கிராமமான திருக்குவளைக்கு ஸ்டாலின் இன்று சென்றார். அவர் வருகையை அறிந்த கிராம மக்கள் வழி நெடுகில் நின்று அவருக்கு கை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்கள். ஸ்டாலின் வருகை அறிந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அவருக்கு கை கொடுத்து வரவேற்றனர்.
ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் சொந்த ஊர் மக்கள்கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, ஸ்டாலின் சொந்த ஊருக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us