லால்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருண் நேரு எம்.பி கோரிக்கை

லால்குடி, திருச்சியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்; லால்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரயில்வே அதிகாரிகளிடம் பெரம்பலூர் எம்.பி அருண் நேரு கோரிக்கை

லால்குடி, திருச்சியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்; லால்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரயில்வே அதிகாரிகளிடம் பெரம்பலூர் எம்.பி அருண் நேரு கோரிக்கை

author-image
WebDesk
New Update
arunnehru railway

லால்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் பெரம்பலூர் எம்.பி அருண் நேரு கோரிக்கை விடுத்தார்.

Advertisment

திருச்சி கோட்ட ரயில்வேயில் நடந்து முடிந்த திட்டப் பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப்பணிகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மண்டல ரயில்வே பயிற்சிப் பள்ளி பகுதியில் நடைபெற்றது. இதில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தமது தொகுதியில் உள்ள பிரச்சனைகளை ரயில்வே அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் தமது தொகுதிக்குட்பட்ட லால்குடி ரயில்வே நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

மேலும், லால்குடியின் மூன்றாவது நடைமேடையை உயர்த்த வேண்டும், ரயில் எண் 16127 /16 128 சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22661 /22662 சென்னை ராமேஸ்வரம் சென்னை சேது எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16916/ 16160 சென்னை மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் லால்குடியில் நின்று செல்ல வேண்டும். லால்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும். அப்பாதுரை ஊராட்சியில் ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும். புள்ளம்பாடி பேரூராட்சி புள்ளம்பாடி, திருமழபாடி சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். லால்குடி மணக்கால் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை விரைவாக முடித்து தர வேண்டும். பிச்சாண்டார் கோவில் ஊராட்சி கள்ளத்தெரு ஒன்றின் கீழ் அக்ரஹாரம் 2 மேலகலகாரம் 3 தேவதானம் வெள்ளாளர் தெரு 4 தச்சர் தெரு 5 ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் 200 ஆண்டுகளாக ரயில்வே கிராஸிங்கை கடந்து நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருக்கும் இடுகாட்டுக்கு செல்வதற்கு இதுதான் பிரதான பாதையாக இருந்து வருகிறது. இரு வழி ரயில் பாதை அமைத்த பிறகு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி மேம்பாலத்தின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்பட வேண்டும் என அருண் நேரு எம்.பி தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

Perambalur Southern Railway Indian Railways

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: