சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருவரிடம் இருந்து 68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் பயணிகளிடையே சோதனை செய்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையை மறைத்து வைத்திருந்த இருவரிடம் விசாரித்தனர்.
அந்த சோதனையில் அவர்களிடம் இருந்து 68 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த சுனில் குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil