திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். அவர் காவல் துறையினரிடம், பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல் துறையினர், சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்ததால், உடனடியாக சிலையை துணியால் மறைத்தனர்.
அதற்குள் தகவலறிந்து, திராவிட கழகத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர்.சிலையை சேதப்படுத்தியது குறித்து, சரணடைந்த செல்லக்கிளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Advertisements
மேலும், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக, மீஞ்சூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பெரியார் சிலையும் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil