/tamil-ie/media/media_files/uploads/2023/04/streetlight-759.jpg)
32 கிலோமீட்டர் நீளமுள்ள பெருங்களத்தூர்- புழல் மேம்பால சென்னை புறவழிச்சாலையில் ₹14.82 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
தலா 10 மீட்டர் உயரத்தில் மொத்தம் 1,033 விளக்குகள் நிறுவப்படும். தற்போது, சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் மட்டும் 80 மின்விளக்குகள் ஒளிர்கின்றன.
ஒப்பந்ததாரர் நான்கு மாதங்களில் 2,133 எல்.இ.டி., விளக்குகளை நிறுவும் பணியை முடிக்க எதிர்பார்க்கிறார்.
ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வட்டாரங்கள் தெரிவித்தன.
இவற்றுடன், புறவழிச்சாலையில் தலா 9 மீட்டர் உயரத்தில் 347 ஒற்றை கை அடைப்புக் கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது, சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் மட்டும் 80 மின்விளக்குகள் செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
அம்பத்தூர், போரூர், மதுரவாயல் வழியாக செல்லும் உயர்மட்ட புறவழிச்சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால், மின்விளக்குகள் பொருத்தவேண்டும் என்று வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதற்கேற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.