பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா - “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் நாளை துவக்கம்

கோவை மாவட்டம் பேரூர் அடிகளார் என போற்றப்படும் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டத்தை காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நாளை பேரூர் ஆதின வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அடிகளார் என போற்றப்படும் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டத்தை காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நாளை பேரூர் ஆதின வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
32

கோவை மாவட்டம் பேரூர் அடிகளார் என போற்றப்படும் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒருகிராமம் ஒரு அரசமரம் எனும் திட்டத்தை காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நாளை (மார்ச் 20) பேரூர் ஆதின வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன்:

பேரூர் ஆதினத்தின் 24-வது குரு மகாசன்னிதானம் பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தை நடவு செய்வதை இலக்காக கொண்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டம் நாளை முதல் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல் அரச மரக்கன்றை நாளை பேரூர் ஆதீனம் வளாகத்தில் நடவு செய்ய உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோவை கட்டிட கட்டுமான மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல்கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளனர்.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை

covai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: