Advertisment

5 வயது சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள்: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

author-image
WebDesk
New Update
Stray do.jpg

5 வயது குழந்தையை கடித்த நாய்கள் ராட்வில்லர் வகை நாய்கள் எனக் கூறப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

chennai: சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ரகு தனது உறவினர் ஒருவர் இறந்ததால் விழுப்புரம் சென்றுள்ளார்.

Advertisment

இதனிடையே, நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் 2  நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் திடீரென கடித்துள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன.

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு  நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

குழந்தையை கடித்த நாய்கள் ராட்வில்லர் வகை நாய்கள் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து  உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக புகழேந்தி கூறியதையடுத்து சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

3 பேர் கைது 

இந்த நிலையில், குழந்தையை நாய்கள் கடித்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மேலும் பேசுகையில், "நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை வளர்த்து வந்துள்ளனர். 

நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவச் செலவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்." என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment