/indian-express-tamil/media/media_files/2cSCMPNoNvAzJBY89hhK.jpg)
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை (ஜன.9) முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை நேரில் அஜராகி பா. ராம்குமார் கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வரக் கூடிய சூழலில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம்.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அவசர வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நாளை இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.