நெல்லையில் அதிர்ச்சி... 'அமரன்' படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Alangar theatre

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது அமரன் படம். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, சுமார் ரூ. 200 கோடிக்கும் மேல் இத்திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, காஷ்மீரிகளை தவறாக சித்தரித்துள்ளதாக இத்திரைப்படத்திற்கு எதிராக பல அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அமரன் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அலங்கார் திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரையரங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். திரையரங்கின் வளாகத்தின் முன்புறத்தில் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Theatres Tirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: