/indian-express-tamil/media/media_files/gYrVqMUlnQvb8maz1v8S.jpg)
தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு யாரோ ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டுவீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
“ஆளுநருடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை கூறும் போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. சாலையில் நடந்து சென்ற நபர் அதை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செயல்தாலும் அது தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது. இந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குசீர் கெடவில்லை “ என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.