Advertisment

பேராசிரியர் மீது கோபம்: கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 மாணவர்கள் கைது

ஆத்திரமடைந்த மாணவர், அன்று இரவு தனது சக நண்பர்கள் 3 பேருடன் வந்து கல்லூரி நுழைவு வாயில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Clg bomb.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது அங்கு வந்த ஒரு மாணவரை, முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரிப் பேராசிரியருமான முகிலன், இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவர் கோபத்துடன் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

பின்னர், நேற்று (பிப்.15) மாலை கல்லூரியில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் முகிலனுடன், மதுபோதையில் இருந்த அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பேராசிரியர் முகிலன், அந்த மாணவரின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், அன்று இரவு தனது சக நண்பர்கள் 3 பேருடன் வந்து கல்லூரி நுழைவு வாயில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

Clg bomb1.jpg

இதுகுறித்து தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீஸார் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் பொன்.பெரியசாமி அளித்த புகாரின் பேரில், மாணவர்கள் பவித்ரன்(22), கபிலன்(21), பிரதீஸ்(22), ஜீவா(21) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். பேராசிரியர் மீது கோபம் கொண்ட மாணவர் கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment