தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவரம்பூர் யூனியன் அலுவலகம் முன்பு, மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பி குமார் அறிமுக உரையாற்றினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் மன்றத்தின் நடுவராக சி பி ஐ எம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பொறுப்பேற்க, DYFI மாநிலத் துணை தலைவர் பா.லெனின், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர். வி.மணிமாறன் ஆகியோர் வழக்கினை தொடுத்தனர்.
AIDWA மாவட்டத் துணைத் தலைவர் ரேணுகா, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் கோ. வி.வெற்றி செல்வன் ஆகியோர் வழக்கினை மறுக்க, நீண்ட நெடிய வழக்கை விவாதித்தனர்.
அப்போது, பல்வேறு முன் உதாரணங்களை தொகுத்து நடுவர் ஜெயசீலன் தீர்ப்பு வழங்கினார். பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த. மாற்றுத்திறனாளி தோழர்களும், சகோதரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்ட. குற்றப்பத்திரிகை தாக்கல் நிகழ்வுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
முன்னதாக, காட்டூர் பகுதி செயலாளர் எஸ் வெங்கடசுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். காட்டூர் பகுதி தலைவர் நன்றி கூற நூதனப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil