scorecardresearch

“தி கேரளா ஸ்டோரி’யை தடை செய்ய வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

கேரளாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சில பெண்களின் கதையை படம் சித்தரிப்பதாக கூறுகிறது.

The Kerala Story box office collection Day 2 Adah Sharmas controversial film gains big earns almost Rs 20 crore
தி கேரளா ஸ்டோரி வெள்ளிக்கிழமை (மே 5) தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சில பெண்களின் கதையை படம் சித்தரிப்பதாக கூறுகிறது. படத்தை வெளியிட அனுமதித்தால், இந்தியாவில் மதவெறி கலவரங்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ள பன்மொழிப் படமான ‘தி கேரளா ஸ்டோரி’க்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (பி.ஐ.எல்.,) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

லைவ் லாவின் படி, சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பி.ஆர்.அரவிந்தாக்ஷன், கேரளாவை பயங்கரவாத ஆதரவு மாநிலமாக சித்தரிக்க திட்டமிட்ட முயற்சி என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், படத்தை வெளியிட அனுமதித்தால் அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவமானம் என்றும், இந்தியா பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு என்ற எண்ணத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சன்ஷைன் சினிமா புரொடக்ஷனால் தயாரிக்கப்பட்டு, சுதிப்தோ சென் இயக்கிய இந்தத் திரைப்படம், கேரளாவைச் சேர்ந்த சில பெண்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி இஸ்லாமிய தேசம் ஈராக் மற்றும் சிரியாவில் (ISIS) சேருவதற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கதையைச் சித்தரிப்பதாகக் கூறி சர்ச்சைக்குள்ளானது. படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்டது, இதுவரை சுமார் 18 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர் அஞ்சினார்.

பார் அன்ட் பெஞ்ச் படி, கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.,-ல் சேர்ந்தனர் என்ற அதன் கூற்றை ஆதரிக்க எந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும் படம் மேற்கோள் காட்டவில்லை என்று பி.ஐ.எல்., கூறுகிறது.

“உள்துறை அமைச்சகமோ அல்லது புலனாய்வு அமைப்புகளோ அத்தகைய தகவலை வெளியிடவில்லை என்று நான் சமர்ப்பிக்கிறேன். சன்ஷைன் பிக்சர்ஸ் தி கேரளா ஸ்டோரி படத்தின் டீசரை ஏன் வெளியிட்டது என்று எனக்குப் புரியவில்லை, இது ஒரு உண்மைக் கதை என்று கூறி, பார் அண்ட் பெஞ்ச் பொதுநல மனுவை மேற்கோள் காட்டியது.

மனுதாரரின் முந்தைய கோரிக்கைகளை பரிசீலிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியது, படத்தை வெளியிட முற்றிலுமாக தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே படத்தின் வெளியீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சி.பி.ஐ.,(எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.,) இளைஞர் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உண்மைத் தவறுகள் மீது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு டிரெய்லரின் விளக்கமும் மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், வெளியீட்டிற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து எந்த சிறப்பு அறிவுறுத்தலும் பெறப்படவில்லை, ஆனால் தேவைப்படும்போது தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் அனைவரும் தயாராக உள்ளனர் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pil filed in madras high court to ban the kerala story

Best of Express