/indian-express-tamil/media/media_files/2025/03/21/UEhbT1ojeKNQFjY9tzGE.jpg)
பினராயி விஜயன் சென்னை வருகை
தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்தடைந்தார்.
2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதி மறுசீரமைப்பின் பணிகள் விரைவில் மத்திய அரசால் துவங்கப்படும் எனக்கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
இந்த தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டு, மார்ச் 22 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொகுதி மறுவரையறையை தென்னிந்தியாவுக்கு எதிரான ஒரு 'சதி' என்று விவரித்தார், மார்ச் 13 அன்று டெல்லியில் அவரை சந்தித்த திமுக தலைவர்களிடம் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறினார். இருப்பினும், கூட்டத்தில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுட் தெலுங்கானாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு எல்லை நிர்ணய நடவடிக்கையை மேற்கொண்டால், தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்படும் என்பதால் வடக்கில் உள்ள மாநிலங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வட மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும். இந்த கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தொகுதி மறுவரையறை முற்றிலும் மக்கள் தொகை அடிப்படையில் நடத்தப்பட்டால், 130 ஆக உள்ள மக்களவையில் தென் மாநிலங்கள் எவ்வாறு அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பதை ஸ்டாலின் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஜு ஜனதா தளத்தின் ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கும் மார்ச் 22 கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி பிஆர்எஸ் அமைப்பும் தனது பிரதிநிதியை அனுப்ப உள்ளது.
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து விவாதிக்க தெலுங்கானா அரசாங்கத்தால் மார்ச் 17 அன்று அரசியல் கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டது. துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா கூட்டிய கூட்டத்தை பிஆர்எஸ் மற்றும் பாஜக புறக்கணித்தன, அதே நேரத்தில் காங்கிரஸ், எம்ஐஎம், சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.