/indian-express-tamil/media/media_files/2025/03/27/V9SUJGnpc5WUQvdIkVPR.jpg)
சென்னையில் முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்; எப்போது?
சென்னையில், குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பணிகளின்போது சில பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். அதன்படி தற்போது தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்வதால் மார்ச் 29 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மார்ச் 30 (ஞாயிறுகிழமை) அன்று காலை 10 மணி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். மண்டலம் 9, 10 மற்றும் 13-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மண்டலம்-9 (தேனாம்பேட்டை) - சூளைமேடு,நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் (பகுதி), தி.நகர் (பகுதி) கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் (பகுதி), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) - கோடம்பாக்கம், தி.நகர் (பகுதி), மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே நகர், சைதாப்பேட்டை, மண்டலம்-13 (அடையாறு) - சைதாப்பேட்டை (பகுதி).
மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்துக் கொள்ள அறியுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் இலவச நடைகளாக வழங்கப்படும் குடிநீர் தடையின்றி வழக்கம்போல் வழங்கப்படும். மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக் கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.