சென்னையில் இந்தப் பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் திரு.வி.கா.நகர், அம்பத்தூர் உள்பட 5 மண்டலங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை என 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் திரு.வி.கா.நகர், அம்பத்தூர் உள்பட 5 மண்டலங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை என 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
chennai water
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை சென்னை நகரில் உள்ள 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

திரு.வி.கா.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) ரெட்டேரி சந்திப்பில் உள்ள 200 அடி சாலையில் சர்வீஸ் லேனில் பைப்லைன் இணைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

அப்பகுதி மக்கள் தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்கவும், டேங்கர் தண்ணீர் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: