/indian-express-tamil/media/media_files/3nhUlJXZ3zViYaldGfGM.jpg)
கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை 125 பேருந்துகள் மற்றும் சனிக்கிழமை 165 பேருந்துகள் என மொத்தம் 290 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக பஸ் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு போக்குவரத்து கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை 125 பேருந்துகள் மற்றும் சனிக்கிழமை 165 பேருந்துகள் என மொத்தம் 290 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி (வழி. ECR), திருவண்ணாமலை (வழி. ஆற்காடு, ஆரணி) மற்றும் திருவண்ணாமலை (வழி. காஞ்சிபுரம், வந்தவாசி) ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 40, சனிக்கிழமை 40, மொத்தம் 80 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.