Advertisment

காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை... 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 22 ஏக்கர் நிலம் எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMER

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது.

Advertisment

நாட்டிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, தமிழிழ்நாட்டில் 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இருப்பினும், அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக தலா 1 மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம், மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது:  “மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில், புதிய கல்லூரிகள் தொடங்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்படும். அதற்காக, மாவட்ட தலைமை மருத்துவமனையை ஒட்டி, தலா 22 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகு, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவி, மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் இந்த கல்லூரிகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Medical College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment