Advertisment

ரேஷன் அட்டைக்கு ரூ.15,000 நிதியுதவி கோரி வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
plea dismissed demand rs 15,000 to ration cards, corona relief fund, corona virus relief to ration card rs 15000, ரேஷன் அட்டைக்கு 15000 ரூபாய் நிதியுதவி கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி, கொரோனா நிதியுதவி, chennai high court order, latest chennai high court news, latest coronavirus news, latest tamil nadu news, latest tamil news, chenani high court

plea dismissed demand rs 15,000 to ration cards, corona relief fund, corona virus relief to ration card rs 15000, ரேஷன் அட்டைக்கு 15000 ரூபாய் நிதியுதவி கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி, கொரோனா நிதியுதவி, chennai high court order, latest chennai high court news, latest coronavirus news, latest tamil nadu news, latest tamil news, chenani high court

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க செயலாளரான வழக்கறிஞர் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதாது என்றும், தற்போது ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் சுகாதார பிரச்னைகள் மட்டுமல்லாமல், பொருளாதார வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டி, 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது எனக் குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.

தற்போதைய சூழ்நிலையை முழுமையாக அறிந்துள்ள அரசு நிர்வாகம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண தகுந்த நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கும் எனவும், நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Coronvirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment