'காலிலே கூட விழுகிறோம்... தயவு செய்து சேர்த்துக்கோங்க: இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி கூட்டத்தில், ஆதரவாளர்கள் ரஞ்சித் குமார், எடப்பாடி பழனிசாமியிடம் தங்களை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு உருக்கமாகக் கோரினார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி கூட்டத்தில், ஆதரவாளர்கள் ரஞ்சித் குமார், எடப்பாடி பழனிசாமியிடம் தங்களை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு உருக்கமாகக் கோரினார்.

author-image
WebDesk
New Update
ranjithkumar

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூட்டத்தில், ஓ.பி.எஸ். அணியின் நிர்வாகி ரஞ்சித் குமார் முக்கியப் பேச்சு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். "அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ். அணியை இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 'மூன்றெழுத்து கட்சி' அதாவது தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

Advertisment

அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ். அணியை மீண்டும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ரஞ்சித் குமார், இதற்காக எடப்பாடி பழனிசாமி காலில் கூட விழத் தயாராக இருப்பதாக உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். ஓ.பி.எஸ். அணியை அ.தி.மு.கவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

சமீபத்தில் சென்னையில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஓ.பி.எஸ். அணி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, காஞ்சிபுரம் கூட்டத்தில் ரஞ்சித் குமாரின் இந்த வெளிப்படையான பேச்சு, அ.தி.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணி இடையே மீண்டும் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

Dmk Admk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: