/indian-express-tamil/media/media_files/InoobzVIq39H1y9E0c0m.jpg)
இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஈரோட்டை சேர்ந்த அசிப் முஸ்திகீன் என்பவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம்குற்றவாளி என தீர்ப்பு வந்தாலும், கூட வழக்கு விசாரணையின் போது காலவரம்பின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் இவர் ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார் என்பதற்கு ஆதாரங்களும் இல்லை என்று கூறி, அசிப் முஸ்தகீனுக்குநிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் போதோ அல்லது தீவிரவாத நோக்குடன் மக்களை தாக்கும்போதோ, உ;பா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், ஆனால் இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது அந்த சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.