Advertisment

+ 2 வகுப்பு தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் புதுச்சேரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 புதுச்சேரி ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் - பச்சையம்மாள் தம்பதியினரின் மகள் மேனகா. இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவி மேனகா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல்நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாணவியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment