Advertisment

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை: ரிசல்ட்டுக்கு முன் குமரியில் தியானம்

3 நாள் பயணமாக மே 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் கட்ட வாக்குப்பதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும்  ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில்,  7-ம் கட்டத் தேர்தல் பரப்புரை மே 29-ம் தேதி முடிவடையும் நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி மே 30-ம் தேதி முதல் 3 நாள் பயணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றார். இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவும் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 30, 31 மற்றும் ஜுன் 1-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி வரும் மோடி  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் ஒரு நாள் (மே 31) தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் பின் ( ஜூன் 1-ம்) தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமயிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

PM TN.jpeg

இதைத் தொடர்ந்து ஜுன் 1-ம் தேதி தியானத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி நிகழ்வில் வேறு யார், யார் வருகிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்  பிரதமரை தமிழக அரசின் சார்பில் வரவேற்பார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என பாஜகவினர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

PM Narendra Modi Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment