Advertisment

மோடி ரோட் ஷோ; கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடி; பா.ஜ.க.,வின் சாலைப் பேரணியில் பங்கேற்பு; பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்

author-image
WebDesk
New Update
Modi welcomes

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடி; பா.ஜ.க.,வின் சாலைப் பேரணியில் பங்கேற்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவைக்கு இன்று பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாலை 5.45 மணிக்கு பிரதமர் பங்கு கொள்ளக்கூடிய ரோட் ஷோவிற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் தொடங்கும் நிகழ்ச்சியானது ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் வரை 2.5 கீ.மி தூரத்திற்கு நடைபெறுகிறது. 

சாலைகளில் இருபுறமும் பிரதமரை வரவேற்க தடுப்புகள் அமைத்து பா.ஜ.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். வாகன பேரணி முடியும் ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாவட்டத்தில் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.,வினர் செய்ய உள்ளதாகவும் அதற்கு பிரதமர் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலை 5.30 மணிக்கு விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்கும் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment