Advertisment

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு: ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலிடம் கேட்டறிந்தார் மோடி.

author-image
WebDesk
New Update
sdaa

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலிடம் கேட்டறிந்தார் மோடி.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. ஆனால் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைப்பேசி மூலம் தொடர் கொண்டு பிரதமர் கேட்டறிந்தார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment