Advertisment

பிரதமர் மோடி வருகை- கோவை மாநகரில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்க தடை

கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

author-image
WebDesk
New Update
modi uae

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளதை ஒட்டி கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் இன்று முதல் பல்வேறு பகுதிகள்  தற்காலிக "Red Zone" பகுதிகளாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment

மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இன்று (மார்ச் 15) கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

அதனை தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோநிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

Coimbatore

இதனை முன்னிட்டு இன்று (மார்ச் 15) முதல் 19 ஆம் தேதி வரை கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் தற்காலிக "Red Zone" பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

எனவே இந்த பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment