New Update
/indian-express-tamil/media/media_files/fDPhD8yhhQrN0gB0a4YJ.jpg)
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
00:00
/ 00:00
சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியை 'பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Pm Modi | Tha Mo Anbarasan: தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசின் ஊரக தொழில்துறை அமைச்சராக இருபவர் தா.மோ.அன்பரசன். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வரும் இவர், கடந்த 9 ஆம் தேதி சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.
அந்த வீடியோவில் அவர், "எவ்வளவோ பிரதமர்களை நாங்கள் பார்த்துள்ளோம். இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நாங்கள் பார்த்ததில்லை. தி.மு.க-வை யார் யாரோ ஒழித்து விடுவேன் என்று சொன்னான். அவன் தான் ஒழிஞ்சு போயிருக்கனே தவிர, இந்த இயக்கம் கம்பீரமாகத் தான் இருக்கும். நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லனா பீஸ் பீஸ் ஆகிடுவேன்" என்று அவர் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், தா.மோ. அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியும் உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் வசிக்கும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யா ரஞ்சன் ஸ்வைன், இந்த சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் தா.மோ. அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.