Advertisment

பிரதமர் மோடி ரோட் ஷோவில் விதிமீறல்: வழக்குப்பதிவு

சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasas
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்னும் 7 நாட்களில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

சென்னை பாண்டி பஜாரில் நடந்த ரோடு ஷோவில் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை செய்தார்.

Advertisment
Advertisement

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர்  மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment