பிரதமரின் வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
முதுமலை புளிகள் காப்பகத்தில், உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகின்ற 9ம் தேதி பிரதமர் மோடி வருகிறார். இதற்காக 5 அடுக்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மசினகுடி- தெப்பகாடு வனப்பகுதி சாலை பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் மோடி வருவதால், ஊட்டி அருகே உள்ள சிங்காரா சாலையில் பிரம்மாண்ட ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிபாடை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil