பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டம்- வீட்டுக் காவலில் அய்யாக்கண்ணு

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார்.

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார்.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

அயோத்தியில் ராமர்கோவில் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதும் அயோத்தி ராமரின் குல தெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடுக்கு வருகின்றார்.

திருச்சி வரும் பிரதமர் மோடிக்கு தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி காட்டும் போராட்டம்‌ அல்லது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ய போவதாக தகவல் வெளியானது.

இதற்கு அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க அய்யாக்கண்ணு இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

Advertisment
Advertisements

அப்போது அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செல்ல முடியாதபடி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், துணை ஆணையரே இங்கு வந்து உங்கள் மனுவை பெற்றுக்கொள்வார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Trichy

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது;

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.

எனவே, பிரதமர் மோடி திருச்சி வரும்போது அவரை கண்டித்து கருப்புக்கொடி காட்டவோ, அல்லது உண்ணாவிரதம் இருக்கவோ அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க செல்லும்போது என்னை தடுத்து வீட்டுச்சிறையில் வைத்து உள்ளனர்.

எமக்கு‌ எந்த அடக்குமுறை வந்தாலும் அந்தத் தடையை மீறி நாளை மோடி திருச்சி வரும்போது போராட்டம் நடத்துவோம் என‌த் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: