Advertisment

'திருவள்ளுவர் சிலையின் காலடியில் நிற்பது சிறந்த அனுபவம்': மோடி பதிவு

திருக்குறளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

author-image
WebDesk
New Update
kanyakumari Modi
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த மே 30-ம் தேதி தமிழ்நாடு வருகை தந்தார். கன்னியாகுமரி வந்த அவர் விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் இருந்து நேற்று ஜுன் 1-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரி வந்த போது அவர் கடலுக்கு நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை செலுத்தினர். அப்போது திருவள்ளுவர் சிலை பார்வையாளர் குறிப்பேட்டில் மோடி எழுதினார். அதில், மாபெரும் துறவி திருவள்ளுவரின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம். இலக்கியம், தத்துவவியலின் உச்சமாக இருப்பவர் திருவள்ளுவர். 

Advertisment

சமூகத்தின் கடமை, நெறிமுறைகளை பற்றிய ஆழமான கருத்துகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்றது திருக்குறள். சர்வதேச அளவிலான கூட்டங்கள், தேசிய அளவிலான கூட்டங்களில், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. 

மேலும், திருக்குறளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்பும் எங்களது நோக்கத்திற்கு வள்ளுவரின் குறள்கள் உத்வேகத்தை தருகிறது. உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அதில் எழுதியுள்ளனார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment