Advertisment

விவேகானந்தர் மண்டபத்தில் மோடி: 45 மணி நேர தியானம் தொடக்கம்

பிரதமர் கோவிலில் தரிசனம் முடித்து நேராக, பூம்புகார் படகு துறையில் இருந்து தனிப்படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கு விவேகானந்தா கேந்திரம் தலைமை நிர்வாகி பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

author-image
WebDesk
New Update
 PM Narendra Modi begins meditation at Vivekananda Rock Memorial Tamil News

மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை மாலை சரியாக 6.45-க்கு தொடங்கினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். பின்னர் அரசு விருந்தினர் விடுதிக்குள் சென்ற அவர், வெள்ளை நிறத்திலான வேஷ்டி, கழுத்தில் கவி நிற துண்டுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 

Advertisment

அப்போது, பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் பிரதமர் மோடிக்கு தேவி பகவதி அம்மன் படத்தை கொடுத்து வரவேற்றார். அங்குள்ள சன்னதிக்கு சென்ற பிரதமருக்கு கோவில் மேல் சாந்தி மந்திரங்கள் செல்லி பிராத்தனை செய்த பூக்கள், சந்தனம், விபூதி  உடன் அம்மனுக்கு சாத்திய மலர் மாலையை அணிவித்தார்.

பிரதமர் கோவிலில் தரிசனம் முடித்து நேராக, பூம்புகார் படகு துறையில் இருந்து தனிப்படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கு விவேகானந்தா கேந்திரம் தலைமை நிர்வாகி பாலகிருஷ்ணன் வரவேற்றார். விவேகானந்தர் நினைவு மண்டபம் பாத மண்டபத்திற்கு சென்று வணங்கிய பின், மண்டபத்திற்குள் சென்று விவேகானந்தர் சிலையை வணங்கினார். 

இதன்பின், மீண்டும் சென்ற வழியிலே படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கிய பிரதமர் தியானம் மண்டபத்திற்குள் சென்று வணங்கினார். சில நொடிகளுக்கு பின் தரையில் அமர்ந்து தியானத்தை மாலை சரியாக 6.45-க்கு தொடங்கினார். அவர் தனது 45 மணி நேர தியானத்தை தொடங்கினார்.

தியானத்தின் போது, மோடி நீராகாரம் மட்டுமே அருந்த உள்ளார். அவர் இளநீர், எலுமிச்சை சாறு, திராட்சை ஆகிய பானங்களை மட்டுமே அருந்துகிறார். தியானம் பகுதியில் இரண்டு மத்திய சிறப்பு படை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு இரண்டு பேர் என மாறி மாறி பணியில் ஈடுபட உள்ளார்கள். 45 மணி நேர தியானம் முடித்தபின் அவரது பயண திட்டம் பற்றிய தகவல் வெளிவரும். 

 

கடற்பரப்பில் கடலோர காவல்படையை சேர்ந்த 4 பெரிய படகுகள் மற்றும் கடலோர காவல் படையின் 15 சிறிய படகுகள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பாதுகாப்புக்காக சுற்றி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி பகுதி  காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறி, குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சிறப்பு காவல்துறை, கடலோர காவல்படை, முப்படைகளின் கண் காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள கடைகள் எல்லாம் வழக்கம் போல் திறந்து உள்ளன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

kanniyakumari Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment