/indian-express-tamil/media/media_files/HNTeYJVDXYSB73t0fvnH.jpg)
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு திட்டத்தின்கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018-ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது.
2024-ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19-ம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.
இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் மொத்தம் 27 வகை பிரிவு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அண்மையில், டெல்லி சென்ற தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பிதழ் அளித்தார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ம் தேதி தொடர்ந்து, 2 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி சென்னைக்கு வருகிறார். ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
அடுத்த நாள், ஜனவரி 20-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, டெல்லி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த பயணத்தின் மூலம் ஒரே மாதத்தில் 2 முறை தமிழகம் வருகை தருகிறார். பிரதமர்மோடி கடந்த 2-ம் தேதி திருச்சியில் பன்னாட்டு விமான முனையத்தைத் திறந்து வைப்பதற்காக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.