/tamil-ie/media/media_files/uploads/2023/01/death-1.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு நகர பா.ம.க செயலாளராக இருந்தவர் நாகராஜன். இவர் மணிக்கூண்டு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு (ஜூலை 9) வியாபாரத்தை முடித்துக் கொண்டு 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், நாகராஜனை தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு போலீசார் நாகராஜனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை முன் 100க்கும் மேற்பட்ட பா.ம,கவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிகக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். செங்கல்பட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் கொலையில் தொடர்புடையவர்களாக அஜய், கார்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினரிடமிருந்து அஜய் தப்பி ஓட முயன்ற போது காவல்துறையினர் அவரை சுட்டுப் பிடித்தனர். இதில் இடது காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் 5 பேரை தேடி வருகின்றனர். காவல்துறையினரை அஜய் கத்தியால் தாக்கவிட்டு தப்ப முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பா.ம.க நிர்வாகிகள் 3 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.